1.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் அழிக்கப்பட்டன

செர்டாங்,டிச. 27-


1.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சூதாட்ட உபகரணங்கள், கடத்தல் பொருட்கள், சிகரெட்டுகள் மற்றும் சிமுலேட்டர் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குப் பொருட்களை செர்டாங் போலீசார் இன்று அழித்தனர்.

இவை 2016 இலிருந்து 2023 வரையில் முடிக்கப்பட்ட 336 வழக்குகள் சம்பந்தப்பட்ட 353,400 யூனிட் பொருட்களாகும் என செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி ஏ. அன்பழகன் தெரிவித்தார்.

“இதில் 168 யூனிட் மடிக்கணினிகள், 59 யூனிட் டேப்லட்டுகள், 32 மோடம்கள் மற்றும் ரவுட்டர்கள், 14 சிமுலேட்டர் இயந்திரங்கள் ஆகியவை அடங்கும் என்றார்.

காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளரின் நிலையாணை கட்டளை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இந்தப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அன்பழகன் கூறினார்.

WATCH OUR LATEST NEWS