குளுவாங், டிச. 27-
நபர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், சாலையை விட்டு விலகி அருகில் உள்ள கால்வாயில் விழுந்ததில் மரணமுற்றார்.
இச்சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் ஜோகூர், குளுவாங், ஜாலான் கம்போங் தெங்காவில் நிகழ்ந்தது. வெள்ளிக்கிழமை தொழுகைக்காக 61 வயதுடைய அந்ந நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தார்.