பாபாகோமாவிற்கு எதிராக ஐஜிபி வழக்கு

கோலாலம்பூர், டிச. 28-


தமக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக சர்ச்சைக்குரிய அரசியல்வாதியும், விதாண்டவாதியும், அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினருமான பாபாகேமாவிற்கு எதிராக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் அவதூறு வழக்கை தொடுத்துள்ளார்.

வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் என்ற பாபாகோமா, ஐஜிபி.யை நோக்கி, தடித்த சொற்களை பயன்படுத்தியதன் விளைவாக அந்த உயர் போலீஸ் அதிகாரி தமது வழக்கறிஞர் மூலம் இந்த அவதூறு வழக்கை சார்வு செய்துள்ளார்.

கெளரவ விபச்சாரக் கைதி என்றும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கால்களில் விழுந்துக்கிடக்கிறார் என்றும் கூறி, கடும் சொற்களை கொண்டு டான்ஸ்ரீ ரஸாருடினை நோக்கி பிரயோகித்து இருப்பதாக பாமாகோமாவிற்கு எதிரான அவதூறு வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபாகோமாவிற்கு எதிரான இந்த அவதூறு வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டதாக ஐஜிபியின் வழக்கறிஞர் ராம் குமார் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS