அதிகாலை 3 மணி வரையில் சேவையை நீடிக்கவிருக்கிறது ராபிட் கே.எல்

கோலாலம்பூர், டிச. 28-


2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை மலேசியர்கள் குதூகலத்துடன் வரவேற்கும் வகையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பேருந்து மற்றும் ரயில் சேவையை வழங்கி வரும் பிரதான நிறுவனமான ராபிட் கே.எல். வரும் புதன்கிழமை அதிகாலை 3 மணி வரையில் தனது போக்குவரத்து சேவையை நீடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

புத்தாண்டு முதல் நாள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு தொடங்கி புதன் கிழமை அதிகாலை 3 மணி வரை பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நீடிக்கப்படும்.

அதேவேளையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களுக்கான பேருந்து சேவையை அதிகாலை 3.30 மணி வரை நீடிப்பததற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராபிட் கே.எல். இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS