கோலாலம்பூர், டிச. 28-
பத்துமலை திருத்தலத்தில் வீற்றிருக்கும் 140 அடி உயர முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேக விழா, வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி புதன்கிழமை ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
முருகனின் திருவடிக்கு ஒன்பதாம் ஆண்டாக நடைபெறும் பன்னீர் அபிஷேக விழாவிற்கு பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு, பன்னீர் அபிஷேகம் செய்யலாம் என்று கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
அன்றைய தினம் காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் 140 அடி உயர முருகப் பெருமானின் திருவடிக்கு பன்னீர் அபிஷேக விழா நடைபெறும் டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டுள்ளார்