சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் மீது கார் மோதியதில் நபர் உயிரிழந்தார்

டிச. 29-

RAUBஇல் இருந்து Mempaga செல்லும் சாலையில், Lingkaran Tengah Utama அருகே 12வது கிலோமீட்டரில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் மீது கார் மோதியதில் Muhammad Faris Kamari என்ற 34 வயது நபர் உயிரிழந்தார். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்துள்ளது என பெந்தோங் மாவட்டக் காவல்துறை தலைவர் Superintenden Zaiham Mohd Kahar தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான கார் கிளாந்தானில் இருந்து மலாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து டிரெய்லர் மீது மோதியுள்ளது என்று Zaiham தெரிவித்தார். உயிரிழந்தவரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் காயமடைந்து பெந்தோங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காயமடைந்த குடும்பத்தினரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

WATCH OUR LATEST NEWS