இரண்டு பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டன

மாச்சாங், டிச. 30-


கிளந்தானில் நேற்று பெய்த கனத்த மழையில் இரண்டு நிலச்சரிவுகளுக்கு வித்திட்டுள்ள வேளையில் மாச்சாங்கில் இரண்டு பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால், ஓரிட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டரசு நெடுஞ்சாலையின் கமுனிங் – புக்கிட் பெல்லா மற்றும் ஜாலான் பத்து 30, தெமங்கான் ஆகிய இரண்டு முதன்மை சாலைகளில் நீர் கரைப்புரண்டோடுவதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த இரு சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில பொதுப்பணி இலாகா இயக்குநர் நிக் சோ யாக்கோப் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS