மோட்டார் சைக்கிளை எரித்ததாக மாது மீது குற்றச்சாட்டு

தைப்பிங், டிச.


தவணைப் பணத்தை செலத்தாததால், இழுக்க வந்த தனது மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டதாக மாது ஒருவர் தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

43 வயது ரபிடா ஜைனுல் அபிடின் என்ற அந்த மாது, நீதிபதி நபிஷா இப்ராஹிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றஞ்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தைப்பிங், பொக்கோக் அஸாம், ஜாலான் மஸ்ஜிட்டில் அந்த மாது இக்குற்றத்தைப்புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 7 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டு, நாச வேலையில் ஈடுபட்டதாக அந்த மாதுவிற்கு எதி ரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை அந்த மாது ஒப்புக்கொண்டதைத்தொடர்ந்து வரும் ஜனவரி 14 ஆம் தேதி தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS