மூழ்கும் இழுவை படகிலிருந்து நால்வர் காப்பாற்றப்பட்டனர்

பெக்கான், டிச. 30-


பகாங், பெக்கான், பந்தாய் லிஜண்டா கடற்பகுதியில் கிட்டத்தட்ட மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியிருந்த இழுவை படகிலிருந்து மூன்று இந்தோனேசியர்கள் உட்பட நால்வரை கடல் சார் அமலாக்க ஏஜென்சி காப்பாற்றியுள்ளது.

நேற்று இரவு 7.40 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து முஹிபா ஏபி. 12 என்ற அந்த இழுவைப்படகில் உள்ளவர்களை காப்ற்றுவதற்காக கடல்சார் அமலாக்கப்பிரிவினர் விரைந்ததாக அதன் பகாங் மாநில தலைவர் முதல் நிலை அதிகாரி மஸ்லான் மாட் ரெஜாப் தெரிவித்தார்.

படகும் மூழ்கும் நிலையில் அந்த நால்வரும் பாதுகாப்பு மிதவை ஜேக்கேட்டை அணிந்திருநத்தால் அனைவரையும் உரிய நேரத்தில் காப்பாற்ற முடிந்ததாக மஸ்லான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS