காரினால் மோதப்பட்ட ஆடவர் உயிரிழந்தார்

டிச. 30-

காரினால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், காரின் அடியில் சிக்கி பரிதாபமாக மாண்டார். இத்துயரச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சுங்கை பீசி டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்தது.

33 வயதுடைய அந்த மோட்டார் சைக்கிளோட்டி தலையில் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் Mukhlis Mukhtar தெரிவித்தார்.

காரின் அடியில் சிக்கிய நபரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் உதவியை போலீசார் நாடியதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS