கோலாலம்பூர், ஜன.2-
அடுத்த வாரம் திங்கட்கிழமை புத்ராஜெயா, நீதித்துறை கட்டடத்தின் முன் நடைபெறும் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு ஆதரவு தருவிக்கும் பேரணியில் தனது உறுப்பினர்கள் பெரியளவில் திரள்வதை கட்சி ஊக்குவிப்பதாக அதன் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் இதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதைப் போல மக்கள் பிரச்னையாக கருதப்படுவதால் இந்த பேரணியில் மக்கள் கலந்து கொள்வதைதை பெரியளவில் ஊக்குவிக்கப்படுவதாக தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார்.