ஜன.3-
அரசு சாரா அமைப்பொன்று மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட இருவருக்கு எதிராக காவல் துறையில் புகார் கொடுத்துள்ளது. அவ்விருவரும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim முக்கு எதிராக அவதூறு நோக்கிலான பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதாக Sekretariat Gerak Gempur Media Sosial Rakyat என்ற அந்த அமைப்பு தெரிவித்தது.
கடதாண்டு டிசம்பரில் தேசநிந்தனை மற்றும் மாமன்னரைச் சிறுமைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட Iswardy Morni எனும் சமூகவாதிக்கு பிரமர் ஆதரவளித்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் நோக்கமுடைய அந்த பதிவு மலேசியா மட்டுமின்றி உலக முழுவதும் பகிரப்பட்டிருந்தது. அது ஓர் அவதூறு குற்றம் என அவ்வமைப்பின் பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில், அவ்வமைப்பிடம் இருந்து புகார் பெறப்பட்டிருப்பதை Dang Wangi மாவட்ட காவல் துறை தலைவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.