கிரீக், ஜன.6-
டெலிக்கோம் மலேசியா டி – சட்டையை அணிந்துக்கொண்டு கேபல்களை வெட்டி, களவாடிக்கொண்டு இருந்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பேரா, கிரீக், ஜாலான் கோர ருய் என்ற இடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த இந்த திருட்டுச் சம்பவத்தில் அந்த மூன்று பேரையும் ரோந்துப் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர் என்று கிரீக் மாவட்ட போலீஸ் தலைவர் சுல்கிப்ளி மாமூட் தெரிவித்துள்ளார்.
வெள்ளை நிற வேனில் வந்திறங்கிய அந்த மூவரும் டெலிக்கோம் மலேசியா டி சட்டையுடன் நிலத்தடி கேபலை வெட்டிக்கொண்டு இருந்த போது, அவர்களின் செயலில் சந்தேகித்த போலீசார், விசாரணை செய்த போது, குட்டு அம்பலமானதாக சுல்கிப்ளி குறிப்பிட்டார்.