கோலாலம்பூர், ஜன.6-
நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்ட்ட அரசாணை உத்தரவு தொடர்பான கடிதத்தை வெளியிட்டதற்காக மேன்மை தங்கிய பகாங் சுல்தானுக்கு அந்த முன்னாள் பிரதமரின் குடும்பத்தினர் இன்று தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
கடந்த சனிக்கிழமை இரவு 10.40 மணியளவில் தன்னை அழைத்த டத்தோ பெங்கெலேலா பிஜயா டி ராஜா டத்தோ அமட் கிர்ஸால் அப்துல் ரஹ்மான், தமது தந்தைக்கு அரசாணை உத்தரவு தொடர்பான கடிதத்தை பகாங் சுல்தானும், 16 ஆவது முன்னாள் மாமன்னருமான சுல்தான் அப்துல்லா வெளியிட்டள்ளார் என்ற விவரத்தை தெரிவித்ததாக நஜீப் மூத்த மகன் டத்தோ முகமட் நிஸார் குறிப்பிட்டுள்ளார்.