இரண்டு பேர் உட்பட மூன்று மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல்

ஜன.13-

கடந்த வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் உட்பட மூன்று மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் – மீட்புப் பணி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. 47 வயது Asrulhisham Zainon, அவரது 16 வயது மகன் Shahril Aiman Asrulhisham, 16, 29 வயது Mohamad Al-Amin Sufian ஆகியோரைத் தேடும் முயற்சிகள் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

கெடா, பெர்லிஸ் மாநிலங்களுக்கான Maritim Malaysia வின் இயக்குநர் Romli Mustafa இது குறித்து தெரிவிக்கயில், வான்வழி , கடல்வழி சாதனங்களைப் பயன்படுத்தி 371.28 சதுர கடல் மைல் பரப்பளவில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. காணாமல் போன மீனவர்கள் வியாழக்கிழமை மாலை முதல் கரைக்குத் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS