ஜன.14-
இந்திய வணிகர்கள் மேலும் மேம்பட கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தெக்கூன் நேஷனல் வாயிலாக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்திருப்பதைத் தாம் வரவேற்பதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ இரமணனின் அந்தரங்கச் செயலாளர் டத்தோ அன்புமணி தெரிவித்தார்
இன்று தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சுங்கை பூலோ, TAMAN INDUSTRIயில் அமைந்துள்ள தேவி ஶ்ரீ மகா கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேசிய நிலையிலான Vanakam MADANI பொங்கல் விழாவில் அன்புமணி இவ்வாறு கூறினார்.