மலாக்கா, ஜன.22-
கடந்த ஜனவரி 15 ஆம் தேதி மலாக்கா, கடற்பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு மீனவர்களைத் தேடும் பணி கடந்த 6 நாட்களாக முடுக்கி விடப்பட்ட நிலையில் அந்த இரண்டு மீனவர்களும் இந்தோனேசியா, Dumai- யில் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
63 மற்றும் 55 வயதுடைய அந்த இரு மீனவர்களும் மோசமான வானிலையில் சிக்கி, இயந்திரப்படகும் பழுதடைந்த நிலையில் நீரில் அடித்தச் செல்லப்பட்டு, இந்தோனேசிய மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் ஏஜென்சியின் இயக்குநர் முகமட் கைரி அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.
அவ்விருவரும் எவ்வித காயமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.