கேமரன்மலை, ஜன.25-
நாட்டின் முக்கிய சுற்றுலா வாசஸ்தலமான கேமரன்மலை சுற்றிப்பார்ப்பதற்கு பாதுகாப்பான இடமாகும். கேமரன்மலைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்று கேமரன்மலை மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.
அண்மையில் கேமரன்மலைக்கு செல்லுக்கு பிரதான சாலைகளில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்களைத் தொடந்து அந்த சுற்றுலாத் தலத்திற்கு செல்வது பாதுகாப்பானது அல்ல என்று சுற்றுப்பயணிகள் மத்தியல் அச்சம் ஏற்பட்டு இருப்பதைத் தொடர்ந்து அஸ்ரி ரம்லி இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.