ETS ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

கோலாலம்பூர், ஜன.25-

வரும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு ETS ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 168 டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் கிழக்கு கரை மாநிலங்களுக்கான 43 ஆயிரத்து 210 ரயில் டிக்கெட்டுகளில் இதுவரையில் 33 ஆயிரத்து 831 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS