ஈப்போ, ஜன.27-
ஈப்போ, பண்டார் மேரு ராயாவில் கட்டுமானத் தளத்தில் உள்ள சொக்சோ கட்டடத்தில் 8 மீட்டர் உயரத்திலிருந்து தொழிலளார் ஒருவர் விழுந்து மரணமுற்றார்.
இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை 9 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் வங்காளதேசப் பிரஜை என்று அடையாளம் கூறப்பட்டது.