கோலாலம்பூர், ஜன.28-
இந்தியாவின் 76-வது குடியரசுத் தின கொண்டாட்டம் நேற்று கோலம்பூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கொண்டாட்டத்தை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கோபிந் சிங் டியோ, ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இந்தியாவுக்கான தூதர் B.N. ரெட்டி உட்பட பல நாட்டுத் தூதர்கள், கல்விமான்கள், பெருளாதார வல்லுனர்கள் என நம் நாட்டிலுள்ள முக்கிய இந்திய பிரமுகர்கள் வந்திருந்தனர்.

ஆடல், நடனம், இசை என இந்தியப் பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு, மலேசியா பண்பாட்டு வகையிலும் மலாய் நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன.
சிறப்பு அம்சமாக கண்பார்வையற்றோர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக அறிவிப்புச் செய்ததோடு, பல மொழிகளில் பாடி வந்திருந்தவர்களை அசத்தினர்.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான உறவு நெடுநாள் பந்தம் ஆகும். மலேசிய இலக்கவியல் துறையில் அமைச்சர் கோபிந் சிங் அவர்கள் பல புதுமைகளையும் காலத்திற்கேற்ற மாற்றங்களையும் செய்து வருவதை மலேசியாவுக்கான இந்திய தூதர் B.N. ரெட்டி வெகுவாகப் பாராட்டினார்.
தவிர பெருளாதாரத் துறையிலும், சுற்றுலாதுறையிலும் மலேசியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான இரு வழி உறவை தொடர்ந்து வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் B.N. ரெட்டி வலியுறுத்தினார்.
