6 பேருந்து ஓட்டுநர்கள், போதைப்பொருள் உட்கொண்டதாக அறிகுறி

ஜன.29-

சீனப்புத்தாண்டையொட்டி தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு அமலாக்கப்பிரிவுடன் இணைந்து சாலை போக்குவரத்து இலாகா நாடு த ழுவிய நிலையில், பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு சோதனையை மேற்கொண்டுள்ளது.

420 பேருந்து ஓட்டுநர்களிடம் சிறுநீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 ஒட்டுநர்கள், போதைப்பொருள் உட்கொண்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று JPJ- வின் தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.

பேருந்து ஓட்டுநர்கள், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் இருக்கிறார்களா? என்பதை கண்டறியும் பொருட்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாக Datuk Aedy குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS