எரிபொருள்: நடப்பு விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர், பிப்.12-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் நடப்பு விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ரோன் 95, பெட்ரேல் ரோன் 97, டீசல் ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில், பெட்ரோல் ரோன் 95இன் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசாகவும், பெட்ரேல் ரோன் 97 இன் விலை லிட்டருக்கு 3 ரிங்கிட் 43 காசாகவும், டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 காசாகவும் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சபா, சரவாக்கில் டீசல் லிட்டருக்கு 3 ரிங்கிட் 43 காசாகவும் நிதி அமைச்சு நிலை நிறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS