போலீசாரைத் திட்டிய நான்கு இளைஞர்கள் கைது

கூலாய், பிப்.20-

ஜோகூர், கூலாய் மாவட்ட போலீஸ் நிலையத்தின் முன் போலீஸ்காரர் ஒருவரை சில இளைஞர்கள் கடுமையாகத் திட்டுவதைப் போல் சித்தரிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அதில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் நான்கு நபர்களைப் போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.40 மணியளவில் கிடைக்கப்பட்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் அந்த நால்வரும் அன்றைய தினம் மாலை 5.20 க்கும் 7.40 க்கும் இடைப்பட்ட நேரத்தில் கைது செய்யப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி தான் செங் லீ தெரிவித்தார்.

17 க்கும் 23 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் காவல்துறை சட்டம் 90 ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி தான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS