பெட்டாலிங் ஜெயா, பிப்.26-
கடந்த ஆண்டு ஹோட்டல் ஒன்றில் 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்திற்காக இஸ்ரேலிய பிரஜைக்கு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
அவிதான் ஷாலோம் என்ற 39 வயதுடைய அந்த இஸ்ரேலிய பிரஜைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட மாற்றுக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி ஸாக்கி சாலே இத்தீர்ப்பை வழங்கினார்.
தீர்ப்பு அளிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த இஸ்ரேலிய பிரஜை காஜாங் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த இஸ்ரேலிய பிரஜை இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.