பிரேஸ்மா உணவக சங்கிலி தொடர்பில் சீனி சேர்க்கப்படாத தேநீருக்கு 30 காசு கட்டண கழிவு

புத்ராஜெயா, பிப்.28-

பிரேஸ்மா எனப்படும் முஸ்லிம் உணவக நடத்துநர்கள் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள 12 ஆயிரம் முஸ்லிம் உணவகங்களில் குறைந்த சீனி அல்லது சீனி சேர்க்கப்படாத ஒரு கிலாஸ் தேநீருக்கு 30 காசு கட்டண கழிவு வழங்கப்படுகிறது.

சீனி சேர்க்கப்படாத அல்லது குறைந்த சீனி பயன்பாட்டைக் கொண்ட தேநீரை அருந்தும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

சீனி சேர்க்கப்படாத தேநீருக்கும், சீனி சேர்க்கப்பட்ட தேநீருக்கும் ஒரே விலை நிர்ணயிப்பு இல்லாமல் 30 காசு கட்ட கழிவை வழங்கியிருக்கும் பிரெஸ்மா சங்கிலித் தொடர்பில் உள்ள உணவக நடத்துநர்களைப் பிரதமர் பாராட்டினார்.

இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயா, சிங்கா மடானியில் நாசி கண்டார் உணவகத்தில் மலேசிய மாடானி சின்னத்தை பதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS