புத்ராஜெயா, பிப்.28-
நோன்பு மாதத்தில் அரசாங்க ஊழியர்கள், தங்கள் ஓய்வு நேரத்தை அரை மணி நேரம் குறைத்துக் கொள்வார்களேயானால் அவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி ஃபட்சீல் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு விருப்புரிமைகள் கொண்ட நெகிழ்வான வேலை நேர விதிமுறைகள் உத்தரவு அடிப்படையில் இவ்விவகாரம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சரான ஃபாமி குறிப்பிட்டார்.
விருப்புரிமை A பிரிவின் கீழ் அவர்கள் தங்கள் வழக்கமான வேலை நேரத்தை நிலைநிறுத்திக் கொள்ளலாம். விருப்புரிமை B, தங்களின் ஓய்வு நேரத்தை 30 நிமிடம் குறைத்துக் கொண்டு, வேலை முடிவுறுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாகவே புறப்படுவதற்கு வகை செய்வதாக ஃபாமி விளக்கினார்.