ஷா ஆலாம், பிப்.28-
கோலாலம்பூர் மாநகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு நெரிசல் கட்டணம் விதிக்கப்படும் உத்தேசப் பரிந்துரையை அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக பொது போக்குவரத்து முறை தரத்தை உயர்த்துமாறு அரசாங்கத்திற்கு மசீச இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
பொது போக்குவரத்து உள்கட்டமைப்பு விரிவான முறையில் முதலில் சரி செய்யப்பட வேண்டும். இதில் வழக்கமான பராமரிப்பை உறுதி செய்தல் மற்றும் சேவை இடையூறுகளைக் குறைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மசீச. இளைஞர் பிரிவுத் தலைவர் மைக் சோங் யியூ சுவான் கேட்டுக் கொண்டுள்ளார்.