கோலாலம்பூர், பிப்.28-
புனித ரமலான் மாதத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள், நாளை மறுநாள் மார்ச் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்களின் இறை கட்டளையான நோன்பை தொடங்குவர்.
முஸ்லீம்கள் நோன்பு அனுசரிக்கும் தேதியை அரச முத்திரைக் காப்பாளர் டான்ஶ்ரீ சைட் டானியல் சைட் அஹ்மாட், இன்றிரவு மலேசிய வானொலி, தொலைக்காட்சியான ஆர்டிஎம், நேரடி ஒளிபரப்பு வாயிலாக அறிவித்துள்ளார்.