ஆடம்பரக் கைப்பையைத் திருடியதாக புக்கிட் ஜாலில் போலீஸ் நிலையத் தலைவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மார்ச்.07-

கடந்த மாதம், மாது ஒருவருக்குச் சொந்தமான 3 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள கைப்பையைத் திருடியதாக கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் போலீஸ் நிலையத் தலைவர் இன்ஸ்பெக்டர் அஸ்லான் சூடினுக்கு எதிராக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

45 வயதான இன்ஸ்பெக்டர் அஸ்லான் சூடின், மாஜிஸ்திரேட் பாஃரா நபிஹா முகமட் டான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி மாலை 5.45 மணியளவில் புக்கிட் ஜாலிலில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் 35 வயது பெண்மணிக்கு சொந்தமான ப்ராடா பிராண்டட் வகையைச் சேர்ந்த கைப்பையைத் திருடியதாக அந்த போலீஸ் நிலைய தலைவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த உயர் போலீஸ அதிகாரி, இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் ஒரு நபருடன் கூட்டாக சேர்ந்து விலை உயர்ந்த கருப்பு நிறக் கைப்பையைத் திருடிதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்ற நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 380 ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை இஸ்ஸ்பெக்டர் அஸ்லான் சூடின், மறுத்து விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் மூவாயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் பாஃரா அனுமதித்தார்.

WATCH OUR LATEST NEWS