ஆயர் கெரோ, மார்ச்.07-
சாலையோரத்தில் பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த லோரியுடன் கார் ஒன்று, மோதி விபத்துக்குள்ளானதில் குடிநுழைவுத்துறையின் அமலாக்க அதிகாரி ஒருவர் மரணமுற்றார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மலாக்கா, ஆயர் கெரோ, ஜாலான் அப்துல் ரஸாக் MITC சாலையில் நிகழ்ந்தது.
டொயோட்டா வீயோஸ் காரில் பயணித்த 41 வயது முகமட் பஃட்ஸ்லி ரம்லி என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.
தலையில் கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த அதிகாரி, சம்பவ இடத்திலேயே மாண்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பதிட் தெரிவித்தார்.