சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான அமரன் படம் நல்ல வசூலைப் பெற்று அவருக்குப் பெயரையும் வாங்கி கொடுத்தது. இந்நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஜூட் ஆண்டனி ஜோசப் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் 2018 என்று கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுத்திருந்தார்.
இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சிம்பு வைத்து படம் இயக்குவதாக கூறப்பட்டது. இப்போது அதே கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் என்ன திருப்பம் என்றால் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளாராம்.
இப்போதெல்லாம் ஹீரோக்கள் வில்லனாக நடிப்பது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. ஹீரோவாக ஆர்யா நடிக்கும் படங்கள் பெரிய அளவில் போகவில்லை. கடைசியாக அவர் ஹிட் கொடுத்த படம் என்றால் சார்பட்டா பரம்பரை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். முதல்முறையாக இந்த காம்போ இணைவதால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.