கோலாலம்பூர், மார்ச்.13-
நோன்புப் பெருநாளை முன்னிட்டு தங்கள் கிராமங்களுக்குச் செல்லவிருக்கும் மாநகர் வாசிகளுக்கான பேருந்து டிக்கெட்டுகள் தற்போது பரபரப்பாக விற்பனையாகி வருவதாக டிபிஎஸ் எனப்படும் தெற்கு வழிதடங்களுக்கான ஒருங்கிணைந்த பேருந்து முனையம் தெரிவித்துள்ளது.
வரும் மார்ச் முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரைக்கும் இதுவரையில் 2 லட்சத்து 50 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.
மொத்த டிக்கெட் விற்பனையில் இதுவரையில் 59 விழுக்காடு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டதாக அதன் மூத்த நிர்வாகி , பைஃசால் ரெட்ஸா ரெட்ஸுவான் தெரிவித்தார்.
கிழக்குக்கரை மாநிலங்களுக்கான பேருந்து டிக்கெட்டுகளே அதிகமாக விற்பனையாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.