கோலாலம்பூர், மார்ச்.15-
TBG எனப்படும் கோம்பாக் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் இன்று சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா கண்டது.
கோம்பாக் டோல் சாவடிக்கு அருகில் MRR2 சாலையில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கோலாலம்பூரிலிருந்து கிழக்குக்கரை மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான பேருந்து மையமாகும்.
இன்றைய திறப்பு விழாவில் அதிகமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என்ற போதிலும் பரிட்சார்ந்த நடவடிக்கைக்காக சில பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த பேருந்து முனையத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஶ்ரீ முகமட் நாட்ஸிலிம் முகமட் நோர் தெரிவித்தார்.