கோலாலம்பூர், மார்ச்.22-
கோலாலம்பூர், பந்தாய் டாலாமில் உள்ள ஒரு கிளினிக்கில் தனது பெண் உதவியாளரைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக மருத்துவர் ஒருவர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
34 வயது டாக்டர் ரபிஃயுடின் ஹமிடோன் என்ற அந்த மருத்துவர் நீதிபதி ஸாக்கி சாலே முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 15 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் சம்பந்தப்பட்ட கிளினிக்கின் ஸ்டோர் அறையில் 21 வயதுடைய பெண் உதவியாளரைப் பாலியல் பலாக்காரம் புரிந்ததாக அந்த மருத்துவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மருத்துவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.