பிலிப்பைன்ஸ் வர்த்தகர் கொலையில் தேடப்பட்ட நபர் பெட்டாலிங் ஜெயாவில் கைது

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.27-

கடந்த 2018 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் பிரபல வர்த்தகர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் கடந்த 7 ஆண்டு காலமாகத் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகப் பேர்வழி, பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Dominic Sytin என்ற அந்த பிலிப்பைன்ஸ் வர்த்தகர் கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, மூளையாக இருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது.

அந்த நபர், கடந்த 7 ஆண்டு காலமாகத் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கொலை செய்யப்பட்ட Dominic Sytin சகோதரர் என்று நம்பப்படும் Alan Dennis Lim Sytin என்ற அந்த நபர், கடந்த மார்ச் 22 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கோப்ரா ரக்பி கிளப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்ந்தப்பட்ட நபர், கைது செய்யப்படுவதற்கு முன்பு, மலேசியாவில் அவர் எவ்வளவு காலமாகத் தங்கியிருந்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

WATCH OUR LATEST NEWS