ஒரு பாடலுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பாடகர்

இந்திய சினிமாவில் தலைசிறந்த பல பின்னணி பாடகர்கள் உள்ளனர். இதில் பல முன்னணி பாடகர்கள் ஒரு பாடலைப் பாட ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார்கள். 

ஆனால், ஒரு பாடலை பாடுவதற்காக ரூ. 3 கோடி சம்பளம் வாங்கும் பாடகர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான ஏ.ஆர். ரஹ்மான்தான். 

ஆம், ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசைப் புயலாக வந்த ஏ.ஆர். ரஹ்மான் தான், ஒரு பாடலைப் பாட ரூ. 3 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் இவர் ஒரு திரைப்படத்திற்கு முழுமையாக இசையமைக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS