நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற அறிவுறுத்து

குபாங் பாசு, ஏப்ரல்.13-

போட்டி நிறைந்த உலகளாவிய வேலைச் சந்தையில் திறம்பட போட்டியிடுவதற்கு வட மலேசியப் பல்கலைக்கழகம் – UUM மாணவர்கள் குறைந்தது நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற அறிவுறுத்தப்படுகிறார்கள். மக்களவை தலைவர் டான்ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கூறுகையில், பல மொழிகளைப் பேசும் திறன், பல்கலைக்கழக பட்டதாரிகளின் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும். மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் நான்கு வருட காலத்தைப் பயன்படுத்தி, சேர்ந்த முதல் நாளிலிருந்தே பல மொழிகளைக் கற்று தேர்ச்சி பெற வேண்டும் என்றார்.

நாட்டில் தேசிய மொழியான மலாய் மொழி, அனைத்துலக மொழியான ஆங்கிலம், வணிக மொழியான மாண்டரின், அரபு போன்ற பிற மொழிகளையும் மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும். பல மொழிகளைப் பேசும் திறன் UUM மாணவர்களுக்கு ஒருபோதும் பாதகமாக இருக்காது, ஏனெனில் அனைத்து முதலாளிகளும் அவர்களைத் தேடுவார்கள் என்று அவர் இன்று நடைபெற்ற “தலைமைத்துவ உரையாடல்” என்ற கருத்தரங்கில் தெரிவித்தார். மாணவர்களை கல்விச் சாதனைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், சிறந்த தகவல் தொடர்பு திறன்கள், உலகளாவிய தொடர்புகள், வலுவான நேர்மை போன்ற விழுமியங்களையும் வளர்க்குமாறு ஜொஹாரி அப்துல் அறிவுறுத்தினார். மேலும், அரசியலில் ஈடுபட ஆர்வமுள்ள மாணவர்கள் சிறந்த கல்விச் சாதனை, கவர்ச்சியான தோற்றம் உள்ளிட்ட ஒரு முழுமையான தொகுப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

WATCH OUR LATEST NEWS