எந்தவொரு தரப்பினருடனும் சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது

கோலாலம்பூர், ஏப்ரல்.20-

பகாங் மாநிலத்தில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருடனும் சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது என்று மாநில அரசு இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் பகாங் மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் மறுத்தார். 2023 முதல், அபராதம் விதிக்கும் முறை ஒழிக்கப்பட்டு, குற்றவாளிகள் நேரடியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்கள் என்றார்.

WATCH OUR LATEST NEWS