கிம்மா பாரிசான் நேஷனல் வேட்பாளருக்கு ஆதரவளிக்க களத்தில் இறங்குகிறது

தாப்பா, ஏப்ரல்.20-

கிம்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் டாக்டர் முகமட் யுஸ்ரி பாக்கீருக்கு ஆதரவளிக்கக் களத்தில் இறங்கவுள்ளது. கிம்மாவின் தலைவர் டத்தோ ஶ்ரீ சையிட் இப்ராஹிம் காடீர் கூறுகையில், வீடு வீடாகப் பரப்புரை செய்வதன் மூலம் இந்திய முஸ்லிம் வம்சாவளியைச் சேர்ந்த 329 வாக்காளர்களையும் நேருக்கு நேர் அணுகியுள்ளோம் என்றார்.

இந்த 329 வாக்குகளும் தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவாக இருப்பதை உறுதிச் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்திய முஸ்லிம் சமூகம் இதற்கு முன்பு நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் சராசரியாக 85 விழுக்காடு வாக்களிக்கும் பதிவைக் கொண்டுள்ளது. இந்த வாக்களிப்பில் ஒவ்வொரு வாக்கும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கிம்மா விரும்புகிறது. இதில் 18 வெளியூர் வாக்காளர்களை அவர்களின் கடமையைச் செய்ய ஆயர் கூனிங்கிற்குத் திரும்பும்படி வலியுறுத்துவதும் அடங்கும். பரப்புரையின்போது சந்தித்த வாக்காளர்களிடமிருந்து நேர்மறையான ஆதரவு கிடைத்ததால், தேசிய முன்னணி ஆயர் கூனிங் சட்டமன்றத்தில் தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கிம்மா நம்புவதாக சையிட் இப்ராஹிம் காடீர் தெரிவித்தார்.

இருப்பினும், ஆயர் கூனிங்கில் உள்ள ஆதரவை தேசிய முன்னணி எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை, மேலும் வாக்காளர்களை வாக்களிக்கச் செய்ய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும். கிம்மா அம்னோவின் கூட்டணிக் கட்சியாகும், மேலும் தேசிய முன்னணி உடனான அரசியல் ஒத்துழைப்பில் இந்திய முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS