புத்ராஜெயா, மே.02-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு கொசோவோ நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயரிய விருதை கொசோவோ அதிபர் டாக்டர் Vjosa Osmani வழங்கி சிறப்பு செய்துள்ளார். ஐரோப்பிய நாட்டின் தென்கிழக்கில், செர்பியா எல்லைப் பகுதியிக் வீற்றிருக்கும் கொசோவோ, பிரதமர் அன்வாருக்கு இந்த உயரிய கௌரவிப்பை வழங்கியுள்ளது.
இன்று காலையில் புத்ராஜெயா, காம்ப்ளெக்ஸ் பெர்டானாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கொசோவோ நாட்டின் அதிபர் டாக்டர் Dr Vjosa Osmani அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் இண்டிபெண்டன்ஸ் விருதை வழங்கி சிறப்பு செய்தார்.