பிகேஆர் தற்போது அதிகாரப் பரிசோதனையின் கட்டத்தில் உள்ளது

கோலாலம்பூர், மே.12-

நம்பிக்கைக் கூட்டணி – தேசிய முன்னணி இடையே ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கிய பிறகு, பிகேஆர் எனப்படும் மக்கள் நீதிக் கட்சி இப்போது அதிகாரப் பரிசோதனையின் கட்டத்தில் உள்ளது. பதவிகளையும் அதிகாரத்தையும் தேடி பலர் பிகேஆரில் சேர்கிறார்கள். இதனால் கட்சியுடன் நீண்ட காலமாக போராடிய ‘பழையவர்களை’ வீழ்த்த முயற்சிகள் நடக்கின்றன என்று பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி கூறினார்.

சிரமமான காலங்களில் யாரும் பிகேஆருடன் இருக்க விரும்பவில்லை என்றும், 2022 இல் ஆட்சிக்கு வந்த பிறகு, பலர் பதவிகளுக்காகக் கட்சியில் சேர்ந்ததாகவும் அவர் கூறினார். 16வது பொதுத் தேர்தலுக்கு முன் அரசாங்கத்தைத் தொடர்ந்து நிர்வகிக்க பிகேஆரின் போராட்டம் தொடர இந்தத் தேர்தல் மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS