புது டெல்லி, மே.14-
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 பேர் யார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் 3 பேரை பாதுகாப்புப் படையினர் அண்மையில் சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலை அரங்கேற்ற உள்ளூர் மக்கள் பலரும் உதவியிருக்கலாம், உள்ளூர் பயங்கரவாதிகளின் ஒத்துழைப்பின்றி எதுவும் நடந்திருக்காது என்று உறுதியுடன் நம்பும் இந்திய உளவுத்துறை மேலும் 11 பயங்கரவாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த 11 பேரும் பஹஸ்காம் தாக்குதலில் தொடர்புடையவர்கள். அவர்கள் யார் என்ற பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. 11 பயங்கரவாதிகளுக்கு வயது 20 முதல் 40 வயது வரை இருக்கும் என நம்பப்படுகிறது. பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு உதவி இருக்கின்றனர். ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
11 பேரில் 3 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன், 5 பேர் லஷ்கர் இ தொய்பா, 3 பேர் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.