மக்களவைக் கூட்டம் ஜுலைக்கு ஒத்தி வைப்பு

கோலாலம்பூர், மே.23-

அடுத்த மாதம் நடைபெறவிருந்த நாடாளுமன்ற மக்களைக் கூட்டம், ஜுலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் வகையில் ஜுன் மாதம் நடைபெறவிருந்த மக்களவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி குறித்து முடிவெடுப்பதற்கும், தேவையான ஆலோசனைகளை நடத்துவதற்கும் இந்த ஒத்தி வைப்பு அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS