புக்கிட் ஜாலில், மே.24-
நாட்டின் ஆடவர் இரட்டையர் பிரிவைச் சேர்ந்த மான் வெய் சோங்- தீ காய் வூன் மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்குள் நுழைந்துள்ளனர். அரையிறுதி ஆட்டத்தில் அவர்கள் ஜப்பான் இணையுடன் களம் இறங்கினர். அதில் நேரடி செட்களில் வென்று வெய் சோங்- காய் வூன் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர். அவர்கள் அவ்வாட்டத்தில் வாகை சூட எடுத்துக் கொண்ட நேரம் 31 நிமிடங்கள் மட்டுமே.
இவ்வாண்டு ஜனவரியில் வெய் சோங்-காய் வூன் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்றனர். மலேசிய மாஸ்டர்ஸின் இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றிருப்பதன் மூலம் அவர்கள் இவ்வாண்டில் இரண்டாவது பட்டத்தை வெல்லும் நிலையை நெருங்கியுள்ளனர்.