செப்பாங், மே.27-
சிலாங்கூர் மாநிலத்தில் நிகழ்ந்த கேபல் திருட்டு தொடர்பில் ஐந்து போலீஸ்காரர்கள் உட்பட 15 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கேபல் திருட்டு தொடர்பாக சிலாங்கூர் போலீசார் மேற்கொண்ட மிகப் பெரியத் தேடுதல் நடவடிக்கையில் இந்த 15 பேரும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
கடந்த மே 19 ஆம் தேதி காஜாங்கில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கு இடமாகக் காணப்பட்ட மூன்று வாகனங்கள் சோதனையிட்ட போது, கேபர் திருடும் கும்பலின் நடவடிக்கை அம்பலமானதாக அவர் குறிப்பிட்டார்.