போலீஸ்காரர்களைப் போல் வேடமேற்ற மூவர் கைது

செப்பாங், மே.27-

போலீஸ்காரர்களைப் போல் வேடமேற்று நடித்த ஒரு முன்னாள் போலீஸ்காரர் உட்பட மூன்று நபர்களைப் போலீசார் கைது செய்து இருப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

கடந்த மே 25 ஆம் தேதி சைபர் ஜெயாவில் ஓர் உள்ளுர் நாடகப் படப்பிடிப்பில் அவர்கள் அத்தகையப் பாத்திரத்தை ஏற்று இருந்தது தொடர்பில் அந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போலீஸ் துறையின் அனுமதியின்றி போலீஸ்காரர்கள் பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் மற்றம் பொருட்களை அந்த மூன்று நபர்களும் தங்கள் வாகனங்களில் வைத்திருந்ததாக டத்தோ ஹுசேன் தெரிவித்தார்.

குறிப்பாக துப்பாக்கி, ரைஃபல், கைவிலங்கு போன்ற செயற்கையான சாதனங்களையும் அவர்கள் வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS