70 ஆயிரம் ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கோலாலம்பூர், மே.27-

நாளை புதன்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் மேபாங்க் சவால் கிண்ண கால்பந்தாட்டம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கும், ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணிக்கும் இடையில் நடைபெறவிருக்கிறது.

இந்த அனைத்துலக கால்பந்தாட்டப் போட்டியைக் காண்பதற்கு சுமார் 70 ஆயிரம் ரசிகர்கள், புக்கிட் ஜாலில் அரங்கில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் புக்கிட் ஜாலில் அரங்கம் மாலை 5.30 மணிக்குத் திறக்கப்படும். ரசிகர்கள் கொண்டு வரும் கைப்பைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS