பெட்டாலிங் ஜெயா, மே.27-
நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள், தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை வரும் ஜுன் 7 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்களின் அனுமதியுடன் மாமன்னரின் உத்தரவிற்கு இணங்க ஹஜ்ஜுப் பெருநாள் தேதியை ஆட்சியாளர் மன்ற உதவிச் செயலாளர் டத்தோ முகமட் அசேரால் ஜுஸ்மான் இன்றிரவு அறிவித்துள்ளார்.