ஜோகூர் பாரு, மே.28-
மாதுவைப் பாராங் முனையில் மடக்கி,பொருட்களைக் கொள்ளையடித்ததாக நபர் ஒருவர், ஜோகூர் பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
45 வயது K. முருகன் என்ற அந்த நபர், நீதிபதி டத்தோ சே வான் ஸைடி சே வான் இப்ராஹிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த மே 23 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் கூலாய், செனாய், தாமான் டவானி, ஜாலான் பெண்டாஹாராவில் உள்ள பேருந்து நிலையத்தில் முருகன் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 14 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
தீர்ப்பு நாளை வியாழக்கிழமை விதிக்கப்படும் என்று நீதிபதி டத்தோ சே வான் அறிவித்தார்.